பக்கம்:அறிஞர் அண்ணா நினைவஞ்சலி.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என்.வி. கலைமணி

71




தேவைத் திணிப்பாலே ஏங்கி நின்று, அவா பூர்த்தியாக முடியாமல்; அவதிப்படும் மானிடனே!

தேங்கி நிற்கும்போது தெளிவற்றோர் கூறும் வாசகங்களைக் கூறிவிட்டாய் நீ!

வாழையடி வாழையாக வந்து போகும் கோழை மனம் உனக்கும்!

அறிவின்மை ஏழைக்கு அதிகமன்றோ!

தேவை முறியும் போது தெளிந்த அறிவுடையோரும்; ஆவலுக்கு அருள் தாரா அனைத்தையும் மாயை என்பர்!

அஃதைப் பின்பற்றி நீயும் அலறுகிறாய்!

மஞ்சள்; மங்கலத்தின் சின்னம்!

அவ் வண்ணமின்றிப் பொங்கும் இன்பத்தைத் தொடங்கியவர் எவருமில்லை!

முகடு மலையிடுக்கில் போய் மறையும் பகலவனின் ராஜ உடையின் பெயர் அந்தி!

அந்த நிறத்தைக் கூர்ந்து அறிந்தனையோ அஃதும் மஞ்சளே! நாகரிக உலகில், பிணியிருக்கும் இடத்தை நல்லோர்க்குக் காட்டுதற்கு, மருத்துவத் துறையினர் மஞ்சள் கொடி கட்டி, மருளைக் காட்டிடுவர்.

அஃதுமட்டுமா? முக்கடல் உடை உடுத்தி, முப்பால் குறளேந்தி,

திக்கெலாம் புகழ் மணம் பரப்பித் திருக்கோலம் பூண்டிருப்பது தென்னகத்து மண்!

அம் மண்ணின் தானைத் தலைவனாக - தனிப்பெரும் மன்னனாக - சூழ வலம் வந்த சுந்தர அறிவாளன்!

பைந்தமிழறிஞர்! பார்புகழும் பசுந்தமிழ் முதற்செல்வர்!