பக்கம்:அறிஞர் அண்ணா நினைவஞ்சலி.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

96

அறிஞர் அண்ணா நினைவஞ்சலி



போனவர்கள் - உடலங்களைச் சுடுகாட்டுத் தீப்பிழம்பு சாம்பலாக்கிக் கொண்டிருந்தது!

ஒய்ந்துபோன ஜீவன், வன்னிக் கொடிக்குத் தன்னுடைய கூட்டை இரையாக்கி - அது எரிகின்ற விதத்தைக் கலையுணர்ச்சியோடு கண்டுகொண்டிருந்தது.

மேலே நிர்மலமான வானம் அதனைத் தாவிப்பிடித்துக் கொண்டிருந்தது - இறந்தவனின் ஆசைப் புகை:

மனிதனுடைய பிறப்பைப் பற்றி மகிழ்ச்சிக் கொள்ளுகின்ற இந்த உலகம் - அவன் இறந்த பிறகு ஏன் மெளனம் சாதிக்கிறதென்று தத்துவங்களைக் கேட்டால், அது தனக்குரிய விக்ரகங்களைக் காட்டுகிறது.

என்னுடைய சிந்தனை வளையங்கள், இந்த சூழ்நிலைக் கிடையில், மிக அமைதியான நிலையில் சுற்றிக் கொண்டிருந்தன.

ஆனால், அதிலுள்ள ஒர் அழுத்தமான வளையம் மட்டும், வானை நோக்கி அறுந்து போகின்ற பட்டத்தைப் போல - வேகமாக ஒடிக்கொண்டிருந்தது.

இப்போது - இரண்டு மேகக் குவியல்கள், எதிரும் புதிருமாகத் தெற்கிலிருந்தும் - வடக்கிலிருந்தும், குவிந்து கொண்டிருக்கின்றன.

அதோ, அவை ஒன்றை ஒன்று கவ்விக் கொள்கின்றன.

தப்பித்துப்போன எனது சிந்தனை வளையம், அவை பிணைப்பை வெட்டி வீழ்த்திக் கொண்டே, மேல் நோக்கிச் செல்கின்றது.

இப்போது என் எண்ணம், மேகத்தைத் தாண்டி - பூமியின் ஈர்ப்புப் பிரதேசத்தைத் தாண்டி - இறகுகூட நகர முடியா காற்றில்லா பகுதியைத் தாண்டி - கோள் மண்டலத்தைத் தாண்டிச், சென்ற வண்ணமாகவே இருக்கின்றது.

அந்த வான் வெளியின், நெஞ்சத்திலிருந்து கீழ்நோக்கி ஏதோ ஒன்று வருவதுபோல் நான் உணர்கிறேன்.