136
அறிஞர் அண்ணா நினைவஞ்சலி
வாலிபர்கட்கும் உன்மீது வரையிலா பற்றை உண்டு பண்ணிவிட்டாய்.
மலரை நாடி வரும் வண்டினத்தைப்போல் - அவர்கள் உன்னை நாடுகிறார்கள்!
பல அருவிகள், எவ்வாறு ஒன்று திரண்டு நதியில் கூடுகின்றனவோ, அதைப்போல!
வாலிபர்கள் என்ற அருவிகள், காலமெனும் நதியோடு கலக்க ஓடி வருகின்றபோது, தென்றலே, அந்தக் கால நதியினையே நான் ஆட்கொண்டுவிட்டேன்;
நீங்கள் ஏன் அங்கு போய் கூடுகிறீர்கள் என்று கூறி, அந்த அருவிகள் தோள் மீதே உந்தி உந்தி ஆனந்தத் தாண்டவம் புரிகிறாய் போலும்.
அருவிகளின் தோள்களையே ஆட்கொண்டு, வீரத்தை ஊட்டிவிட்டத் தென்றலே, நீ வாழ்க! உன்னை எப்படித்தான் புகழ்வேன்! வார்த்தையிலையே வேறு கூற
சிறுகாலே! இத்தகையப் பண்புபெற்ற நீ, சும்மா இருக்கிறாயா என்றால் - அதுவுமில்லை.
முத்து முத்தான கருத்துக்களை உடைய கடலிலே போய் தவழ்கிறாயே ஏன்.
கடலலையின் உச்சிதோறும் சென்று சதிராடுகிறாய். அந்த இலக்கியக் கடலிலே ஆமையாகவா அடங்கிக் கிடக்கிறாய்?
அந்த இலக்கியக் கடலலையிலே தெப்பம்போல மிதந்து மிதந்து, மூழ்கி மூழ்கி, பல முத்துக்களையும், பவழங்களையும் சேகரித்து - இலக்கிய அறிவு பெறுகிறாயே.
இலக்கியம் என்றால் விளையாட்டா என்ன? இதை அறிவாய் நீ நன்கு அறிவாய்.
இலக்கியக் கடலுக்குள் புகுந்த ஒரு புலவன், சாகும் காலம் வரை அவன் மீண்டும் திருப்தியோடு திரும்ப முடியாதே.