பக்கம்:அறிஞர் அண்ணா நினைவஞ்சலி.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என்.வி. கலைமணி

83



அப்படிப்பட்டக் கால நதியையும், நீ தழுவிக் கொண்டாயே! என்னே உன் சக்தி வீரம்: ஆற்றல்!

காலத்தையும் உன் பக்கம் இழுக்கும் சக்தி உனக்குண்டு என்பதை நிரூபிக்கத்தானே, காலத்தைப் பல பிரிவாக வகுத்துக் குறிப்பிட்ட ஒரு காலமான - வசந்தத்தின் போது மட்டும்; நீ வருகிறாய்! போகிறாய்!

இத்தகைய சக்தி படைத்த என் அருமைத் தென்றலே! உன்னை உளமாற நான் போற்றுகின்றேன்.

உன் வீரம் நம் தமிழ் இனத்திற்கும் தேவை! என்பதால்!

வாழ்க நீ, தென்றலே வாழ்க நீ, வையம் உள்ளளவும்!

தென்றலே! இவ்வாறு நீ ஓடி வரும்போது, வழியில்; அருவியின் தோளிலே உந்தி உந்தித் தாண்டவமாடுகிறாய்.

அந்த அருவிகள் யார் என்று உனக்கும் தெரியும்!

துடிப்பான உள்ளம் படைத்த தமிழகத்து வாலிபர்கள்தான் என்பதை நானும் அறிவேன்.

வாலிபப் பருவத்தின் வனப்பையும் - வலிமையையும், நீ நன்றாக உணர்ந்திருக்கிறாய்.

இமைப் பொழுதில் எதையும் சாதிக்கும் திறன் பெற்றவர்கள் வாலிபர்கள்.

அதைப் போலவே எதையும் அழிக்கவும் வல்லமை பெற்றவர்கள்.

நீ வரும்போது வாலிபர்கட்கு காதல் உணர்வை ஊட்டி ஒன்றுபடுத்துவாய்!

இப்போது, அவர்கள் காதல் களியாட்டத்தில் இருந்தாலும் பிரித்து, கடமை வீரர்களாக மாற்றும் சக்தியை, ஊட்டி விட்டாய்! வாழ்க நின் செயல்! வளர்க பொதிகை புகழ் போல்:

அவர்கள் பருவயிரத் தோள்கள் மீதும், பொங்கு மணி மார்பகத்தின் மீதும், நீ தவழ்ந்து, உலுக்கிப் புறநானுற்று வீரர்களாக்கி விட்டாய்.