பக்கம்:அறிஞர் அண்ணா நினைவஞ்சலி.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என்.வி. கலைமணி

103


'உண்மையை நீ உரைக்கமாட்டாய். ஒரு கிச்சிலிப் பழத்தோலை நசுக்கினாலும் கண் எரியக்கூடிய ரசமாவது கிடைக்கும்'!

'உன்னைக் கசக்கிப் பிழிந்தாலும், நீ பொய்யைத் தவிர, உண்மையைப் பேசமாட்டாய்' என்று உதாசினம் ஆடினர்:

என்னுடைய வார்த்தைகள்; உங்கள் தலைகட்கு மேலே ஒளிர்ந்து கொண்டிருக்கும் விண்மீனைப்போல் - இல்லை யென்றால், உங்களுடைய உடம்பில் ஒடிக்கொண்டிருக்கும் உயிரைப் போல உண்மையானது தான்.

உங்களுடைய கிராமத்திலிருக்கின்ற ஒரு கலைஞன், யாழை மீட்டுகின்றபோது வரும் உண்மையான சுவர ஜாலங்களைப் போல; அப்பழுக்கற்றவை.

கட்டாந்தரையைக் கழனியாக்க, நிலத்திலே தோய்ந்து பளபளக்கும் கார் முனையைப்போல - என்னுடைய உண்மைகள் ஒளிர்கின்றன என்று கூறுகிறேன்.

அந்தப் பறவை, அப்போது தன்னுடைய கம்பீரமானத் தோற்றத்தால் , கிராம மக்களைத் திரும்பிப் பார்த்தது! ஒரு குரல் எழுப்பியது! ஒரே ஒரு வினாடிதான்!

மனிதன் இறப்பை வென்றுவிட்டான்! அவனுடைய உடலிலிருக்கும் உயிரணுக்கள், இனி மரணத்திற்கு அஞ்சவேண்டியதில்லை!

இந்த உலகம்; என்று மனிதனுக்குப் பிறப்பைக் கொடுத்ததோ - அன்றே, இறப்பையும் கொடுத்தது!

ஆனால், அந்தப் பறவை, சாகா வரத்தைத் தந்துவிட்டு - விடிவதற்கு முன், சென்றுவிட்டது!

அறிஞர் அண்ணா அவர்கள், அந்த வான் பறவையைப் போல் உலகுக்கு வந்தவர்.

நாட்கள் தோறும் செத்துக் கொண்டிருக்கின்ற ஜனநாயகம், அறிஞர் அண்ணாவால் சாகாவரம் பெற்றது.