புலவர் என்.வி. கலைமணி
159
பகலவனை வணங்குகின்ற நேரத்தில், மனிதன் விழித்துக் கொண்டிருக்கிறான்.
நிலவைப் பற்றி நினைக்கின்ற நேரத்தில், மனிதன் பாதித் தூக்கத்திலே இருக்கிறான்.
மென்மையான தென்றலின் தேர் மேலேறி பயணம் வருகின்ற இராக்கால மவுனம் - நிலவைத் தன்மீது குடையாகப் பிடித்துக் கொண்டு வருகிறது.
உலகத்தின் நடவடிக்கைகளை முழுமையாகக் காணவேண்டு மென்றால், இரவு நேரம் சரியான நேரமாகும்.
பெரிய மனிதர்களின் போலி வேடமும் -
சந்தர்ப்பவாதிகளின் - கொட்டமும் -
சாகசத்தின் முழு உருவமும்
கட்டவிழ்த்த குதிரையாக ஓடுகின்ற நேரம் - இராக் காலமாகும்.
அந்த நேரத்தில், பொதுவாக மனிதப் பண்பு பலவீனமடைகிறது.
மனிதனுடைய சுய உருவம் - தெரிய ஆரம்பிக்கின்ற நேரத்தில், சிரித்த முகத்தோடு பார்ப்பது நிலாவாகும்.
அந்த நிலவை நாம் போற்ற வேண்டும்.
அது தத்துவத்தில இருந்தால், அதனைப் புத்தம் என்று அழைப்போம்.
அது கவிதையிலிருந்தால் - அதனைக் கவித்துவம் என்று, பாராட்டுவோம்.
சித்தாந்தத்தில் அது இருந்தால், அதைச் சித்தர் பட்டியலிலே சேர்ப்போம்.
அது கணிதத்தில் இருந்தால், எண்களின் மாயத்தில் சேர்ப்போம்.
இலக்கியத்தில் இருந்தால், அதனைப் புலமையிலே சேர்ப்போம்.