190
அறிஞர் அண்ணா நினைவஞ்சலி
மாணித்த ஞான மருந்தே! என் கண்ணின் ஒளியே! ஆணிப் பொன்னே!
சீர்கொண்ட திரள் அறிவு நுதல் சுருங்கும் அறிவு நிறைச் சுருக்கமே!
உனக்கே விழைவு கொண்டு; ஓலமிட்டு இங்கே எனக்கென்று இருக்கின்ற இருதயத்தை உன்பால் வைத்தேன்.
தனக்கென்றும் ஒன்றுமில்லாத தயவே! பிறர்க்களிக்க மனக் கதவைத் திறந்து வைத்த - அன்பு மாளிகையின் வாயிலே!
குடி வாழ்த்தும். கோனே! உன் வாய்ப்பட்ட வார்த்தை யெல்லாம் மணக்கும் - சிந்தனைக் கரம்பட்ட பொருளெலாம் மனக்கும்! நோய்ப்பட்ட சமுதாயத்தின் மருந்து நீர்!
ஓயாத புகழ் வாசம் வீசுவாய் நீ!
படுக்காத அறிவனே! எடுத்த புகழத்தனையும் இந்நாட்டுக்கே நீ எடுத்த புகழ்!
அடுத்துவரும் புகழெல்லாம் தமிழ்நாட்டுக்கு அன்று எதற்குண்டு?
வாங்கி ஒளிக்கீற்றை வாரி இறைக்கும் திங்கள்; தீங்கு தருவதில்லை - அங்கும் வளம் தருமே!
மூங்கை வாய் திறந்து, மொழி நலனில் பேச வைக்க - நீங்கள் செய்யும் பணி, நிலமுள்ளவரை நீடிக்கும்.
தோள் சுமந்த புகழ்த் தோளே! நீர் செய்த செயல் எல்லாம் சேவற் கொண்டை நிறப் பூ பூக்கும் புகழ் மொய்க்கும்.
அதைக் கண்டு என் அன்னை நிலமே இன்பம் துய்க்கும்.
கொம்புத்தேனும் செழும்பாகும் குலவும் பசும்பாலும் கூட்டி, உண்டார்போல் இனிக்கும் குணங் கொண்டவனே!
உன்னில் என்னைச் சேர்ப்பாய்?
எனது நினைவஞ்சலியை நின் மலரடியில் வைக்கின்றேன்.