புலவர் என்.வி. கலைமணி
83
உன் அணிவகுப்பில் முன் நிற்க உந்தி ஓடி வாராராகில்
பெரு நோய்கள் அரசியலில் தொத்திச் செத்துப்
பிறப்பதற்கே தொழிலாகிப் பிறந்தார் என்பேன்!
குறளானை, இலக்கியக் குன்றானை, கற்பனை ஊர்தியானை,
தத்துவக் கடலானை, தூற்றல் நஞ்சை உண்டானை,
நாடகத் துறையானை, நல்ல பகுத்தறிவால் குறை தீர்ப்பானை,
இன்னமுதச் சொல்லாட்சி ஈவானை, நடமாடும் இலக்கியத்தானை,
மக்களவையில் மருள் நீக்கிய பேச்சால் ஐயம் தீர்த்தானை!
என் உள்ளத்து உள்ளே ஒளிந்து வகை செய்யும் நிறைவோனை
காலத்தின் ஏழெட்டோடு, ஈரெண்டாண்டையும் கடந்தானைக்,
காஞ்சி வாழ்ந்திட்ட பேரறிஞனை, உணராதார் செந்நெறிகளைப் போற்றாதாரே!
எல்லாமே எனது அண்ணன் என்று நின்றாய் போற்றி,
மல்லோட்டி எமை மக்களாக்கிப் படைத்தாய்ப் போற்றி
மதி பழுத்தறம் சொற் கணிச்சாறுகளால் எமை மதிக்க வைத்தாய் போற்றி,
கல்லாதார் காட்சிக்கும் அரும்பொருளானாய் போற்றி,
கற்றார் இடும்பைக் களைவாய்ப் போற்றி,
கொல்லாத சொல்லளிக்கா நாவோய் போற்றி:
தென்னாட்டுக் காந்தியெனும் பேரறிஞர் போற்றி!
காஞ்சிக் கோட்டமே, கடிகையே போற்றி! போற்றி!
★★★