பக்கம்:அறிஞர் அண்ணா நினைவஞ்சலி.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என்.வி. கலைமணி

119



பகைவர்க்குத் தீ, நீ! தகிப்போர்க்கு நீர், நீ!

எளியோர்க்குத் திண்மை, நீ! வழி பிறழ்ந்தார்க்குத் திசை, நீ

அந்தத் திசையில் திகழும் இயற்கை, நீ! இயற்கையின் எழில் நீ

விண் நீ! விண்ணில் ஒளிரும் மின், நீ! ஞாயிறும் திங்களும், நீ

காய் நீ! கனியின் நின்ற சுவை நீ!

மணம் விரவும் நுகர்ச்சி நீ! நிலை குலையா அரசியலும் நீ!

நான் - நீயாகி, நேர்மையாகி, நெடுஞ்சுடராகி, நிமிர்ந்து நிற்பதற்கும் வேண்டும் - நீயே!

நாட்டினர் விரும்புகின்ற சோசலிச வித்தும் நீ!

அமைதியான அரசியலுக்குரிய, ஜனநாயகத் தாய் நீ!

வறியவர்கட்கும், உழைப்பவர்கட்கும், சுற்றம் நீ!

பொன் செயும் பொருளாதாரத் தத்துவம் நீ!

மன்பதைக்குத் துணையாகும், அமைதி நீ!

தன்னலத்தை மறுத்த, தாய்மை நீ!

தழைப்பதற்கே நிலைத்து நின்ற, தத்துவச் சுரங்கம் நீ!’

உற்றிருந்த உணர்வுக்கு உருவம் நீ!

உற்றவர்க்கு சுற்றமாய், நின்றாய் நீ!

கற்றறிந்த கலைஞானம், முழுமையும் நீ!

பெற்றிருந்த தாய், அவளின் அன்பும் நீ!

பின்னியெனைப் பிணைக்கின்ற, பிணைப்பும் நீ!

வற்றாத அறிவுக்கு மூலமாகத் திகழ்பவர் நீ!

வண்டமிழாள் ஈன்றளித்த தலைமகன் நீ!

உதயத்தின் உச்சியே! உலகத்தின் உண்மையே நீ!