புலவர் என்.வி. கலைமணி
157
ஒரு மனிதனுடைய வாழ் நாட்கள், பறக்கின்ற பறவையைப் போல செல்லுகின்றது என்றால் - அந்தப் பறவைகள் கூடு கட்டுகிற இடம், விண்மீன்கள் மீதுதானா?
என்னுடைய மன உளைச்சலிலிருந்து, நான் விடுதலை பெறுவதற்காக, என் கையில் ஒரு விளக்கு இல்லையே - என்று, இயற்கையெனும் கலைஞனைப் பார்த்துக் கேட்டேன்.
அவன் தன் நெற்றியைச் சுருக்கிக், கால்களை அகல விரித்து, உன்னை நான் இருட்டுக்கு அழைத்துச் செல்லவா? ஒளி தரும் சூரியனைப் பகலிலே தந்தேன்?
நீ தாமரைப் பூத்த தடாகத்தில் குளித்துவிட்டு -
மல்லிகை மணக்கும் பூங்காவில் ஓய்வெடுத்தபின் -
வண்டுகள் மொண்டு வைத்த தேனை வாரி உண்ட பின் -
உன் வழிப் பயணத்தை என்னிடத்தில் முடித்துக்கொள் என்று நான் சொல்லவில்லையா?
மறைபட்ட பொருளை வெளியாக்கி - சிறைபட்டச் சீவனை விடுதலை செய்து -
முட்டாள் தனத்தை அறிவு மயமாக்கி -
குழந்தையை வாலிபனாக்கி
வாலிபத்தை வயதாக்கி -
மேலை கீழாக்கி - கீழை மேலாக்கி
சகதியிலே நீ விழாமல் இருப்பதற்காக, உனக்கென ஓர் ஒளியை உருவாக்கியவன் நான்.
அந்த ஒளி - வானத்தில் நிலவாகவும் - பூமியில் உன் மன அறிவாகவும் இருப்பதை நீ உணரவில்லையா?
நீ, கேட்ட பிறகு உன் கோளுக்கு இணங்கி, அதோ அந்த வான வட்டத்தை, உனக்காகப் பரிசளிக்கிறேன்.
அதன் பெயர் நிலவு.