பக்கம்:அறிஞர் அண்ணா நினைவஞ்சலி.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

70

அறிஞர் அண்ணா நினைவஞ்சலி



தேர்ந்த அறிவாளன், தென்னவர் மன்னன் பார்க்கும் கற்பனை!

அவர் வழங்கிய அறிவாழமிக்கக் கருத்து மணம்; வாயுதிர்த்த வளமான பேச்சுக் கலை;

இவையனைத்தும் கொடுக்கும் அறிவொளியில் தமிழ் மக்கள் குடியிருக்கின்றனர்.

அந்த எண்ணச் சுடரனைத்தும் அறிவின் தொகுப்புகள்;

காலத்தை மீறி நிற்கும் சாகாவரம் பெற்றவை!

ஞாலத்தைத் தன் பக்கம் இழுக்கும் வளமான தத்துவங்கள்!

பச்சை என்றாலே வளத்தைச் சுட்டும் நிறமன்றோ!

சமுதாயம் சரிநிகர் சமமாக ஒழுகும் சரியானப் பாதைகளன்றோ அவை:

முற்றும் நீ அறிவாயே! பின் ஏன்; முனையொடிந்தக் கருத்தாலே, பச்சையை மாயை என்றாய்!

வெற்றுக்கு நீயுரைத்தாய்; விளக்கம் நான் தந்துள்ளேன்.

விளங்கி நீ செல்வாய் என்று, முற்றிற்று, கூறிற்று, பச்சை,

மஞ்சள் சாமந்தி:

அஞ்சனந்தோய் விழியுடையாள்; மஞ்சள் நீராடி, அந்தி வேளையிலே

கொஞ்சும் தென்றலோடு; குழையும் கடையினை திருத்தி அமைத்தவாறு;

தளிர்நடை போடுதலொப்ப, செடியின் முடிமீது சிரித்து நின்ற மஞ்சள் சாமந்தி, கேலிச் சிரிப்பு சிரித்தது!

சிரிப்பொலி கேட்டுச் சிலிர்த்து நெருங்கினேன்!

மஞ்சள் சாமந்தியின் கவின்மிகு வண்ணத்தைக் கண்டேன்!

எனக்கு முன்னே எண்ணற்ற மலர்கள் விரவிய அறிவுரை மணங்களை நுகர்ந்தனையோ! என்றது!