பக்கம்:அறிஞர் அண்ணா நினைவஞ்சலி.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

120

அறிஞர் அண்ணா நினைவஞ்சலி



பனிமலரே! பன்னூல் பயனே! பாசத்தின் குருதியே நீ!

திருமணியே தீந்தமிழே! தித்திக்கும் தேன்பாகே நீ!

தீங்கரும்பின் இன்சுவையே! திகழும் சோதியே நீ!

அருளே! அருட்கருவே! அன்பின் இலக்கணமே நீ!

ஒருவனாய் உலகுக்கு வந்துதித்த ஒழுக்கமே நீ!

ஓருருவில் மூவுருவம் ஆனாய் நீ!

கருவறுத்து இந்தியினைக் காய்த்தோன் நீ!

கனித்தமிழின் கனிச்சாற்றால் சுவை தந்தோன் நீ!

மருவற்ற சொல்லாட்சி செய்பவனே, நீதான்!

மான் அமைதி நெஞ்சம் கொண்ட மாமேதை நீ!

அறிவொளியால் எமை ஆட்கொண்ட அருட்செல்வன், நீ!

'வசவாளர் வாழ்கவென, வைதாரை வாழ்த்தியவன் நீ!

திருவிடத்தின் முழு உருவம் தந்தாய் நீ!

ஒசை ஒலியெலாம் ஆனாய் நீ!

ஒண்டா உள்ளங்களில் ஒடுங்கினாய் நீ!

மலைமுகடு மாருதத்தின் மென்மையெலாம் நீ!

பிழைத்தாரைப் பொறுத்தருளும் நீதான்

தேசப்பற்றெலாம் தேக்கமாய் நின்ற ஒளி நீ!

கல்லாதார் மனக் கண்ணைத் திறப்பவன் நீ!

பொல்லாத நெறிமுறைக்கு வெல்லாத வைரி நீ!

பொல்லாங்கை வீழ்த்துகின்ற பகையும் நீ!

நில்லாத ஆணவத்தின் கடும் வலிவைத் தகர்த்த மாறன் நீ!

செல்லாத அரசியலைச் சரிய வைத்த தந்திரி நீ!

செந்தமிழின் காவலனாய் நின்றவனும் நீயே!