பக்கம்:அறிஞர் அண்ணா நினைவஞ்சலி.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என்.வி. கலைமணி

155



நான் நடு வானத்திலே இருந்து நழுவிவிடும் எரி நட்சத்திர மல்ல, நெற்கதிர்களுக்கு நடுவில் மினுக்கி விழும் மின்மினி அல்ல.

உரிமைக்குக் கையேந்தி- உணர்வுக்கு அலைந்து கொண்டிருக்கும் ஓர் உயரிய உருவம். இயற்கையின் ஒழுங்கான படைப்பு - தமிழால் எழுதப்பட்ட ஓவியம் - நான் தமிழன்.