பக்கம்:அறிஞர் அண்ணா நினைவஞ்சலி.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என்.வி. கலைமணி

87


தந்தையின் இரக்கத்தை நான் என்றோ இற்றொழித்தேன்.

நீறொர்ந்த மீனென நிலச் சூட்டால் தவிக்கின்றேன்!

காரொர்ந்த கூழெனப் பார்த்திருந்தேன் - ககனத்தை!

வேரறுந்த பாட்டாக விளங்குகின்ற எனக்கெல்லாம்.

தாயாய் - தந்தையாய் - தனிப்பெரும் தெய்வமாய் - அவர் இருக்கின்றார்:

அவரின் தாயுள்ளம் எனக்காகி, இந்த சேயுள்ளம் விளங்குதற்கு - நாளெலாம் வேண்டுகின்றேன்.

நல்லுறக்க நாட்டினிலும், அவிழும் கனவெலாம், அவரே விளக்கானார்!

அந் நல்லோன் உளம் நினைந்து, நான் இவ்வாறு பாடிக் களிக்கின்றேன்.

மலர்

தாயே!

கலைஞர்களது கற்பனைத் திறனால், யானைத் தந்தத்தில் பொற் சிற்பமானவளே!

உன்னை மூன்றாம் பிறையினிலே நான் காண்கிறேன்.

முழு நிலவில் - உன்னிடத்தில் களங்கம் இருப்பதாக என் உபதேசம் இயம்புகிறது.

எனவே, உவாவில் உன் இளஞ் சிரிப்பைக் காண்கின்றேன்.

அன்னாய், என்னை மலராகப் படைக்கும்போது, எதைக் கொண்டு செய்தாய்?

தோட்டத்திற்குள்ளே, எங்கே நீ என்னை ஒளித்து வைத்திருந்தாய்?

பூமியிலே போட்டுப் புழுதியிலே மூடினாயல்லவா என்னை? எனக்கு அப்போது நீ கொடுத்த ஆகாரம்தான் என்ன?

துறல் ஒரு நாள் துாறிற்று!