பக்கம்:அறிஞர் அண்ணா நினைவஞ்சலி.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

52

அறிஞர் அண்ணா நினைவஞ்சலி



அண்ணாவின் பேச்சு வீழ்ச்சிக்கு நடுவில் புகுந்தவர்கள் - மரணம்பட்ட வாய்போல மூடிக்கிடந்தார்கள்.

நீர்வீழ்ச்சியின் தண்ணீரை; என் அலகில் - கொஞ்சம் தானே எடுக்க முடிகிறது; என்றது குஞ்சு.

அதையே உன்னால் ஜீரணம் செய்ய முடியுமா? என்றது தாய். மொத்தத்தையும் குடித்தால்தான் ஜீரணம் செய்ததாகப் பொருளா?

கொஞ்சம் குடித்தால் போதாதா என்றது குஞ்சு, அண்ணாவைக் கொஞ்சம் குடித்தவன் - அதிகம் குடித்தவனாக நினைக்கிறான்.

அதிகம் குடிக்க நினைத்தவன் - குடிக்காமலேயே வியந்து நின்றான்.

நீர்வீழ்ச்சி எங்கே இருந்து வருகிறது அம்மா; என்று குஞ்சு கேட்டது.

தெய்வத்தின் கையில் அன்பு என்ற செம்பு இருக்கிறது, அந்த செம்புக்குள் எட்டு குணங்கள் சேர்ந்த பரிமளங்கள் இருக்கின்றன.

தெய்வம் குழந்தையாக இருக்கும்போது, செம்பைப் போட்டு உடைத்தது.

உள்ளே இருந்த பரிமளங்கள் வழிந்தனவே, அவைதான் நீர்வீழ்ச்சி!

அப்படியானால், அந்தத் தெய்வத்தை எங்கே காணலாம்?

அன்பகத்திலும் அறிவகத்திலும் அதைப் பார்க்கலாம்.

நீர்வீழ்ச்சியை எப்போதாவது நீ பார்த்திருக்கிறாயா? என்று குஞ்சு கேட்டது.

கண்மூடிக் கடைசியாகப் போகும் போது நான் அதைப பார்த்தேன் - என்றது தாய்.

விழி திறந்து அது உலா வரும் போது பார்க்கவில்லையா? என்றது குஞ்சு.