பக்கம்:அறிஞர் அண்ணா நினைவஞ்சலி.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என்.வி. கலைமணி

147



நீ அனலி; கொடுமைகளைத் தீய்ப்பவன்!

நீ அறி; எல்லாம் அறிந்தவன்!

பானு நீ; அதனால் தாமரையைக்கூட மலர வைக்கின்றாய்!

அலரி நீ; யாரையும் விழிக்கச் செய்கிறாய்!

நீ அண்டயோனி! உன்னுள் அறிவுச் செல்வங்கள், எல்லாம் பிறப்பதனால்!

நீ கனலி; உன்னுடைய நிறம் கனகம்!

நீ விகர்த்தனன்; உன்னிடத்திலே பேதம் உண்டு;

தீயைத் தீய்த்து நல்லதை நாட்டிற்கு நல்குவதால்!

கதிரவன் ; வானமே உனக்குக் கழனியாவதால்!

பகலோன் நீ; நாட்களைப் பகர்வதால்!

வெய்யோன் நீ எதையும் வைத்து வளர்ப்பதால்!

தினகரன் நீ புது நாட்களைப் புதுக்குவதால்!

பகல் நீ சொற்களே உன்னிடத்திலிருந்து கிளம்புவதால்!

சோதி நீ; சோதனை உன்னிடத்தில் இருந்து எழுவதால்: ஒளியை உமிழ்வதால்!

திவாகரன் நீ; அறிவொளிப் பிரவாகம் உன்னிடமிருந்தே எடுப்பதால்!

அரியமா நீ; கீழ், அடிவானத்திலிருந்து எடுப்பதால்!

அரிமா நீ கீழ், அடிவானத்திலிருந்து மேல் வானத்திற்கு ஓடுகின்ற குதிரை, மனித இனத்தின் தந்தை நீ;

நீ உதயன்; ஜீவனின் உற்பத்தி.

நீ ஞாயிறு; சிலப்பதிகார ஆசிரியர் உன்னைப் போற்றினார்! கடவுளுக்குப் பதிலாக!

எல்லைநீ; அண்டத்தின் வரைகோடு!