புலவர் என்.வி. கலைமணி
147
நீ அனலி; கொடுமைகளைத் தீய்ப்பவன்!
நீ அறி; எல்லாம் அறிந்தவன்!
பானு நீ; அதனால் தாமரையைக்கூட மலர வைக்கின்றாய்!
அலரி நீ; யாரையும் விழிக்கச் செய்கிறாய்!
நீ அண்டயோனி! உன்னுள் அறிவுச் செல்வங்கள், எல்லாம் பிறப்பதனால்!
நீ கனலி; உன்னுடைய நிறம் கனகம்!
நீ விகர்த்தனன்; உன்னிடத்திலே பேதம் உண்டு;
தீயைத் தீய்த்து நல்லதை நாட்டிற்கு நல்குவதால்!
கதிரவன் ; வானமே உனக்குக் கழனியாவதால்!
பகலோன் நீ; நாட்களைப் பகர்வதால்!
வெய்யோன் நீ எதையும் வைத்து வளர்ப்பதால்!
தினகரன் நீ புது நாட்களைப் புதுக்குவதால்!
பகல் நீ சொற்களே உன்னிடத்திலிருந்து கிளம்புவதால்!
சோதி நீ; சோதனை உன்னிடத்தில் இருந்து எழுவதால்: ஒளியை உமிழ்வதால்!
திவாகரன் நீ; அறிவொளிப் பிரவாகம் உன்னிடமிருந்தே எடுப்பதால்!
அரியமா நீ; கீழ், அடிவானத்திலிருந்து எடுப்பதால்!
அரிமா நீ கீழ், அடிவானத்திலிருந்து மேல் வானத்திற்கு ஓடுகின்ற குதிரை, மனித இனத்தின் தந்தை நீ;
நீ உதயன்; ஜீவனின் உற்பத்தி.
நீ ஞாயிறு; சிலப்பதிகார ஆசிரியர் உன்னைப் போற்றினார்! கடவுளுக்குப் பதிலாக!
எல்லைநீ; அண்டத்தின் வரைகோடு!