பக்கம்:அறிஞர் அண்ணா நினைவஞ்சலி.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

160

அறிஞர் அண்ணா நினைவஞ்சலி




அது வானத்தில் இருப்பதனால் நிலவு என்கிறோம். அது அரசியலிலும் இப்போது வந்திருக்கிறது.

ஆதலால், அதனை அறிஞர் என்று அழைப்போம். இரக்கமற்ற மனிதக் கண்கள், அந்த நிலவைச் சபிக்கின்ற நேரத்தில், அது தன் குளிர்ச்சியைவிட்டுக் கொதிப்படையவில்லை.

ஊமைக்கும் அதியற்புதமான கற்பனையைக் கொடுக்கக் கூடிய சக்தி, நிலா என்று, கவிஞர்கள் கூறுகிறார்கள்.

உடம்பெல்லாம் தொழு நோய்ப் பற்றிய ஒருவன், அந்த நிலா ஒளியில் செல்கிற நேரத்தில், அவன் பாதி குணமாகி விடுகிறான்.

இல்லையென்றால், அவன் உடல் பூராவும் தங்கமாய், மின்னுவதைப் பார்க்கிறோம்.

மண்ணிலே புதையுண்ட தங்கத்தை வாரிக்கொள்வதைப் போல், விண்ணிலே புதைந்த நிலவைக் கண்களால் வாரிக் கொள்கிறோம் கருத்தால் நிரம்பிக் கொள்கிறோம்.

பேரறிஞர்களை நிலவுக்கு ஒப்பிடுவதின் மூலம், நம்முடைய ஆசையைக் காட்டிக் கொள்கிறோம் என்று நினைக்கக்கூடாது.

உயர்ந்த இடத்தில், ஒருவன் சென்றால், அவன் சூரியனைப் போல் எரிச்சலாக இருப்பான்.

ஆனால், பண்பட்ட அறிஞர்கள் உயர்ந்த இடத்திற்குச் சென்றாலும், எரிச்சலாய் இருக்கமாட்டார்கள்.

உயர்ந்த இடத்தில் எரிச்சலை ஊட்டாமல் இருப்பது நிலவு! ஆகவே அண்ணா அவர்கள் ஒரு நிலா.

இப்படி, வாழ்க்கையின் தத்துவத்திற்கு ஒட்டி வருகின்ற ஒரு நிலா, பலருடைய இரகசியத்தை அறிந்ததாகும்.

கோடி மக்களின் அனுபவத்தை உணர்ந்ததாகும்.

அதன் அறிவின் ஆழத்தை, அவனுள் இறங்கி யாரும் கானவில்லை.