பக்கம்:அறிஞர் அண்ணா நினைவஞ்சலி.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

152

அறிஞர் அண்ணா நினைவஞ்சலி



காட்டின் சூழ்நிலை கங்குலின் தோள்மீது தட்டியது! அப்போது இனம் புரியா பயம் ஒன்று எங்களுக்கு ஏற்பட்டது. இது இரவுக்குத் தரும் இனிதான விளக்கம்.

என் தாய்நாட்டுப் பண்பு, அனாதை ஆசிரமத்தில்ல, வாழ்கின்ற சிசுவல்ல, என்னுடைய லட்சியம் எல்லோரும் திருடி எடுத்துக் கொண்டு செல்கின்ற பொருளும் அல்ல.

என்னுடைய நரம்புகள் இயற்கையாலானது. எனது தசை இயற்கையின் ஆதிக்கத்தால் சூடுபடுகிறது.

எனது குருதி, என் தாய் கொடுத்த பால் மட்டுமல்ல, முதல் தாய் முதல் மகனுக்குக் கொடுத்த வீரப்பால் ஆகும்.

விபச்சாரியைத் தூங்கவைத்து, அவளுக்கும் ஒரு புதிய காலையைக் கொடுக்கின்ற சூரியன், எனக்கு வேண்டாம்.

கண்ணகியைத் துயில் நீக்கி, மதுரையைப் புடம் போட்டுத் தங்கமாக்கும் ஒரு புதிய நாளை உருவாக்கிடும் உன்னைப் போன்ற உதயசூரியனே தேவை.

வானமென்ற கருவிலே உற்பத்தியான குழந்தை நீ! உன்னுடைய இனத்தைப் பற்றிப் பிண்டங்களில் உற்பத்தியான குழந்தைகள் ஆராய்ச்சி செய்கின்றன.

புதிதாகப் பிறந்த காலை என்பவனின் கரம். அப்போது பூத்த ரோசா மலர் போல் இருக்கிறது. அதுதான் உனக்குக் கைகுலுக்கிறது.

காலை எழுந்தது, தூக்கம் கலைந்தன பூக்கள். பாவம் செய்யாத பறவைகள் பாடின.

ஒன்றும் அறியாத குழந்தைகள், வீட்டில் இருக்கும் சிறிய விளக்கொளியைப் பார்த்துக் கண்களை உருட்டின.

வைகறையில் தாய் முத்தமிட்டாள், முத்தத்தில் இருக்கின்ற குளிர்ச்சி மூன்று கோடி சந்திரனைத் தோற்கடிக்கும்.

தாய்மையை எடைபோட குழந்தை சிரித்தது. இரகசியமாகக் கிழக்கிலிருந்து எட்டிப் பார்த்தவனே! இதோ, என் கைகளில் பூட்டியிருக்கும் விலங்கைப் பார்த்தாயா?