பக்கம்:ஹிராடெடஸின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

73


★ தமிழ் நாட்டுக் குருமார்கள் தங்களது தலை மயிரை மழித்தும் விடலாம்; வைத்துக் கொள்ளலாம்.

★ தமிழ் நாட்டில் இறந்தவரின் கூடப் பிறந்த ஆண்கள், மற்றும் தாயாதிகள் தலைமயிரை மழித்து விடுவார்கள்.

★ தமிழ் நாட்டினர் சாணத்தையும், களிமண்ணையும், தினை மாவையும் கைகளாலே பிசைகின்றனர்.

★ தமிழர்கள் மண்ணாலும், செம்பாலும், மரத்தாலும் செய்த பாத்திரங்களில் தண்ணீர் அருந்தி வந்தார்கள்.

★ தினந்தோறும் துணிகளைத் துவைத்துக் குளிப்பது அன்றும் இன்றும் தமிழர்கள் வழக்கமாகும்.

★ பெண்கள் ஒரே ஆடையைப் புடைவையாக உடுத்தி, அதில் ஒரு பகுதியால் தமது மார்பகத்தை மூடிக் கொண்டு வாழ்ந்தார்கள். இன்றும் தமிழ் நாட்டு வயல்களில் உழைக்கும் கிராமப் பெண்கள் அவ்வாறே வாழ்கிறார்கள், குளிக்கிறார்கள்.

★ வேள்வி, யாகம் நடக்கும் போது, தமிழ் நாட்டில் யாகம் செய்பவர்கள் சர்வாங்க ஷவரம் செய்து கொள்வது மரபு.

★ தமிழ்நாட்டில் மடாதிபதி, சந்நியாசிகள் முதலானோர் மூன்று வேளை குளிப்பார்கள். இது திரிகால ஸ்நானம் எனப்படும். காலை, மாலை, மதியம் இவ்வாறு செய்வார்கள்.

★ தமிழ் நாட்டில் கோயில் காளை என்றும், கோயில் மாடு என்றும், கோயில் ஆட்டுக் கடா என்றும் வழங்கப்படும் விலங்குகள் கடவுளுக்குக்கென்று விடப்படுகின்றன.

★ தீயில் நிவேதனப் பொருள் வேகும்போது மக்கள் மாரடித்துக் கொள்ளுதல், இறந்தோர்க்குச் செய்யப்படும் சடங்காக இதைச் செய்வார்கள். இறந்த பத்தாம் நாள் சடங்கில் இன்றும் பெண்கள் மாரடித்துக் கொண்டு அழுவது மரபு.