பக்கம்:ஹிராடெடஸின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

74

ஹிராடெடஸின்


★ தமிழர்கள் பசுக்களை தெய்வமாகக் கொண்டாடுவார்கள். வாழ்த்துவதிலும் முதலில் பசுவைத்தான் வாழ்த்தினார்கள். இந்தியா முழுவதும் பசு போற்றப்பட்டு வருகின்றது. ‘கோ’ எம்ரட்சணம், பசுவைக் காப்பாற்றுதல் என்ற வழக்கம் இன்று வரை மக்களால் செய்யப்பட்டு வருகிறது.

★ தமிழர்கள் தங்கள் தெய்வங்களுக்கு ஆடுகளைப் பலி கொடுத்தார்கள்.

★ தமிழர்கள் ஏழு தலைமுறை வரையில் தங்கள் குடும்பப் பெயர்களைப் பாதுகாத்து வந்தார்கள். தென்னிந்தியாவில் கேரளத்தில் உள்ள சிரியன் கிறித்துவர்கள் 2000 ஆண்டுகளின் பரம்பரைப் பஞ்சாங்கம் வைத்திருந்தார்கள்.

★ தமிழர்கள் தங்கள் குழந்தைகளுக்குப் பேதி மருந்தைக் கொடுப்பது வழக்கம். முன்னர் பெரியவர்களும் மாதத்திற்கு ஒரு முறை பேதி மருந்து உட்கொள்ளும் வழக்கம் உண்டு.

★ தமிழர்கள் வயதானவர்களுக்கு மரியாதைக் கொடுத்து வந்தார்கள்; இன்றும் அதைப் பின்பற்றி வருகிறார்கள்.

★ தமிழர்கள், நாட்களுக்கு கடவுளர்களின் பெயரையே இட்டனர்; ஞாயிறு, சூரியன் என்றும், திங்களை, சந்திரன் என்றும் அழைத்து வந்தார்கள். தமிழர்கள் இறந்தவரின் பத்தாம் நாள் சடங்கின் போது எண்ணெய் தேய்த்துக் குளிக்கும் பழக்கம் கொண்டிருந்தார்கள்.

★ தமிழர்கள் கிளிகளுக்கும், குரங்குகளுக்கும் அணி செய்து அழகு பார்க்கும் வழக்கம் உடையவர்களாக இருந்தார்கள்.

★ சாரம் கட்டிப் பாறைகளை உயரே ஏற்றும் பழக்கம் தமிழர்களிடமும் இருந்தது. எடுத்துக் காட்டாக, தஞ்சை பிரகதீஸ்வரர் கோயிலுக்கு அவ்வாறு ஏற்றிய ஊரை இன்றும் சாரப்பள்ளம் என்று அழைத்து வருகிறார்கள்.