தவத்திரு குன்றக்குடி அடிகளார்
அருள்நெறி முழக்கம்
மனிதனைப் புனிதன் ஆக்குகின்றார்!
மனிதாத்மா மகாத்மாவாக மாறுகின்றது!
மகாத்மாவின் உயிர்குடித்தவை துப்பாக்கிக் குண்டுகளா?
அல்ல! அல்ல!
மதவெறித் தீயே மகாத்மாவைக்
காவுகொண்டது!
தலைப்பிரசவத்தில் குழந்தையை ஈன்று தாய் இறந்ததைப் போல, சுதந்திர இந்தியாவின் ஜனனத்தில் மகாத்மா மரித்துப் போனார்!
எல்லோரும் காந்தி ஆகுங்கள் என்பதல்ல நம் பிரார்த்தனை! இயன்றவரை மனிதனாக வாழுங்கள் என்பதே நம் பிரார்த்தனை!
இந்தப் பிரார்த்தனையைத்தான் - அருள்நெறி முழக்கமாய் மகாசந்நிதானம் முழங்கிச் சென்ற வயிர வார்த்தைகளைத்தான் தாய் பாலை (தாய்ப்பாலை)த் தன் குழந்தைக்குச் சேமித்துத் தருவதைப்போல, வருங்காலத் தலைமுறைக்கு ஆதீனக் கவிஞர் மரு.பரமகுரு வழங்கியுள்ளார். அருள்நெறிப் பதிப்பகத்தின் ஆணிவேராய்ச் செயல்படும் ஆதீனக் கவிஞர் மரு. பரமகுரு பணிசிறக்க வாழ்த்துக்கள்! அருள்நெறிப் பதிப்பகத்தின் துடிப்புமிக்க செயல்வீரராக மகாசந்நிதானத்திடம் தாம் பருகிய தாய்ப்பாலை, வளரும் தலைமுறையும், வரும் தலைமுறையும் பருகட்டும் என்று அருள்நெறி முழக்கத்தை அச்சில் பதிவு செய்ய ஆதாரமாய் விளங்கிய கிருங்கை சேதுபதி அவர்களுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்!
அருள்நெறி முழங்கட்டும்!
அன்பு பரவட்டும்!
அருள் சிறக்கட்டும்!
என்றும் வேண்டும் இன்ப அன்பு
குன்றக்குடித் திருவண்ணாமலை ஆதீனம்
குன்றக்குடி
25.03.2006