இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
கோபாலன் தன்னுடைய உறவினர் வீட்டிற்கு வங்திருந்தான். அன்று அமாவாசை, இரவு தோசையைப் பலகாரமாக உண்டான், அதற்குத் தேன்பாகை விட்டார்கள். வெல்லம் காய்ச்சும் போது திரவப்பதத்திலே எடுத்து வைப்பார்கள். அதற்குத் தேன்பாகு என்று பெயர். அதைக் கோபாலன் முன்பு சாப்பிட்டறியாதவனாதலால் அதை மிகவும் சுவைத்து உண்டான். இன்னும் அதிகமாக உண்ணவேண்டும் என்ற ஆசை