மண்நாடும், விண்நாடும், வானவரும்
தானவரும், மற்றும் எல்லாம்
உண்ணாத பெருவெள்ளம் உண்ணாமல்
தான் விழுங்கி உய்யக் கொண்ட
கண்ணாளன், கண்ணமங்கை நகராளன்
கழல்குடி, அவனை உள்ளத்து,
எண்ணாத மானிடத்தை எண்ணாத
போதுஎல்லாம் இனிய ஆறே!
சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் தமிழுக்கும் சைவத்திற்கும் செய்து வரும் தொண்டு ஒரு பல்கலைக் கழகம் செய்து வரும் தொண்டிற்கும் பன்மடங்கு பெரியது. சைவ சமயப் பற்று இருப்பினும் தமிழ் என்று வரும்போது பிற சமயங்கள் தமிழோடு உறவாடும்போது சிறிதும் அவற்றின்மீது காழ்ப்பு இன்றி பிற சமயங்களையும் போற்றி வருவது கழகத்தின் பரந்த நோக்கு என்பது புலனாகின்றது.
இந்த நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு 'சமணமும் தமிழும்' ‘கிறித்துவமும் தமிழும் ‘இஸ்லாமும் தமிழும்' என்று வரிசையாக வெளியிட்டு வரும் மரபு அதன் விரிந்த நோக்கத்தைக் காட்டுவதாக அமைகின்றது. இந்த வரிசையில் வெளிவருவது வைணமும் தமிழும் என்ற நூலாகும்.
1.பெரி. திரு. 16 7