பக்கம்:பலவகை பூங்கொத்து.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

7

தான்-என் முழுப் பெயர் ராஜகோபால் அதை சுருக்கி R_G. பால் என்று வைத்துக்கொண்டேன்’ என்றார்-ஒரு வேளை சீமைக்குப் போய் 1. C. S. பாஸ் பண்ணியபோது பெயர் பெரிதாக இருக்கலாகா தென்று அப்படிச் செய்திருக்கலாமென்று ஊகித்து, "நீங்கள் - இப் பொழுது எந்த ஜில்லாவில் கலெக்டராக இருக்கிறீர்கள் ' என்று மெல்ல வினவினேன். அதற்கு அவர் தான் ஜில்லா கலெக்டரல்ல என்றும் பட்டணத்தில் கிறிஸ்தவ காலேஜில் படிப்பதாகவும் சொன்னார்-அதன்மீது எனக்குவந்த ஆத்திரத்தை அடக்கிக்கொண்டு, 'பிறகு-இந்த ஐ-சி-எஸ்-என்ன ?' என்று கேட்டேன். அதற்கு அப்பிள்ளையாண்டான், "என்னை மன்னிக்கவேண்டும்- I.C.S. என்றால் இன்டர்(Inter)கிளாஸ் (Class)ஸ்டூடன்ட்(Student)" என்று தெரிவிக்க-எனக்கு வந்த கோபம் போய், பிள்ளையாண்டானுடைய குத்திர யுக்தியை வியந்து சிரித்துவிட்டேன். பிறகு என்ன செய்வது ! “என்ன அப்பா ! எதற்காக என்னைப் பார்க்க வந்தாய் ! ' எனக் கேட்டேன்; அதற்கு எனக்கு சினிமாவில் சேரவேண்டுமென்று ஆசையிருக்கிறது-அதற்காக நீங்கள் யாருக்காவது சிபாரிசு செய்ய வேண்டுகிறேன்' என்றான். அதன்மீது-"நீ எங்காவது இதுவரை யில் நடித்திருக்கிறாயா? உனக்குப் பாடத் தெரியுமா என்று கேட்க, 'இதுவரையில் நான் எங்கும் நடித்ததில்லை. எனக்குப் பாட வும் தெரியாது-ஆனாலும் எல்லாம் சீக்கிரம் கற்றுக்கொள்வேன் ' என்றான், ஆனால், "அதெல்லாம் கற்றுக்கொண்டு பிறகு வா; - நான் சிபார்சு செய்வதைப்பற்றி அப்புறம் யோசிக்கிறேன்" என்று சமாதானம் சொல்லி யனுப்பினேன்.


பிறகு ஒரு பெருமூச்சு விட்டுவிட்டு - இனிமேலாவது வேறு தடைகளில்லாமல் நான் இன்றைக்கு எழுத நிச்சயித்திருந்ததை எழுத வேண்டுமென்று தீர்மானித்து மேஜையின் பேரில் என் எதிரில் இருந்த காகிதத்தை எடுத்துப் பார்க்க-அதில் முதல் என்று எழுதி யிருந்த தைக் கவனிக்க-நான் நாடகம் எழுதத் தீர்மானித்தது ஞாபகம் வந் தது. அதன் மீது 'முதல் அங்கம்" என்று எழுதுவதற்காக 'அ' என்று எழுதியவுடன்-என் வீட்டு மெத்தையின் ஹாலின் பின்புறக் கதவின் வழியாக "அப்பேன்!” என்று ஒரு சப்தம் கேட்டது. யார் இந்தப் பக்கமாக வருகிறது என்று ஆச்சரியப் பட்டவனாய்த் திரும்பிப் பார்க்க என் பெண்சாதி வர்க்கத்தில்-எனக்கு நெருங்கிய பந்துவாகிய ஒரு வர் வந்து சேர்ந்தார். இவர் என்னிலும் மூத்தவர்-பெரிய தொனு தொனுப்பு இவர் இங்கு இச் சமயம் வந்து சேர்ந்தாரே என்று என் விதியை நொந்து கொண்டு-என் மன வருத்தத்தையும் அடக்கிக் கொண்டு- வாருங்கள் உட்காருங்கள்' என்றேன். அவர் மெல்ல உட்கார்ந்து, " அதென்ன அப்பேன் உன் வேலைக் காரன் என்னே மேலே விடமாட்டேன் என்றானே" என்றார்,