பக்கம்:உடற்கல்வி என்றால் என்ன.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

169


இயங்கினாலும், தேவையான காற்றைப் பெற்றுத்தர முடியாத பலமற்ற நிலை என்றும் கூறலாம்.

இப்படி ஏற்படுகிறநிலை,இரத்த ஓட்டத்தில் உயிர்க் காற்று கலக்கிற கூட்டு நிலையைப் பொறுத்தும், பயிற்சியின் போது தசைகள் பெறும் இயக்கத்தைப்பொறுத்தும் இது அமையும்.

ஆகவே, சிறப்பான தேகநிலை பெற, அன்றாடம் உடற்பயிற்சிகளை ஆர்வமுடன், தேவையான அளவு, திறமை மிளிர செய்வதை, தொடர்ந்து பின்பற்றி வர வேண்டும்.அப்படி செய்யும் பொழுது தசைகள் வளர்ச்சி பெறுவது போலவே, உயிர்க் காற்றை நிறைய பெறும் வழியில் உள்ளுறுப்புக்களும் உறுதி பெற்று, ஏற்கும் திறனைப் பெறும். இவ்வாறு உடலும் மனமும் பக்குவ நிலையையும் பரிபூரண ஆற்றலையும் பெற்றுத் திகழும்

இதுவரை உயிரியல் கருத்துக்கள் பற்றியும்; உடற் கல்வியுடன் எவ்வாறு உயிரியல் கொள்கைகள் ஒருங்கிணைந்து நடைபொடுகின்றன என்பது பற்றியும் இதுவரை அறிந்து கொண்டோம். அவற்றில் முக்கியமான சில கருத்துக்களை நினைவு படுத்துவதற்காக, இங்கே மீண்டும் தொகுத்துத் தருகின்றோம். அவை உடற்கல்வி ஆசிரியர்கள் உளமார ஈடுபட்டு சிறப்பாகச் செயலாற்ற துணை நிற்கும்.

உயிரியல் கொள்கைகளும் நடைமுறைகளும்

உயிரியல் விளக்கத்திற்கேற்ப, உடற்பயிற்சிகள் விளையாட்டுக்களை மாணவ மாணவியரிடம் அறிமுகப்படுத்தும் ஆசிரியர்கள், நன்கு கருத்தில் கொள்ளவேண்டிய முக்கிய குறிப்புக்களை மட்டும் இங்கே கொடுத்திருக்கிறோம்.