பக்கம்:உடற்கல்வி என்றால் என்ன.pdf/279

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

277




5. தைரியம் (Courage)

தைரியம் உள்ள தலைவனையே தொண்டர்கள் நம்பிக்கையுடன் பின்பற்றிச் செல்வார்கள். கோழைகள் எத்தனைதான் கொள்கை வளமும், கூரிய மதியும் கொண்டிருந்தாலும், தொண்டர்களால் தூற்றப்படுவார்கள். உள்ளத்திலிருந்தும் ஒதுக்கப்படுவார்கள்.

இங்கிலாந்து நாட்டில் பிரதமராக இருந்த வின்ஸ்டன் சர்ச்சில், இரண்டாம் உலகப் போரில் காட்டிய வீரமும் தைரியமும் தான், இன்றும் அவரை உலகமே போற்றிப்புகழும் வண்ணம் உயர்த்தி வைத்திருக்கிறது.

சர்ச்சிலின் மற்றொரு குணம், தான் விரும்பாத ஒரு குறிப்பை,வேண்டியவர்களிடம் கூட, முகத்திற்கு முன்னே துணிச்சலாகக் கூறிவிடுவது தான். அந்தத் தைரியம் தான், அவரை சரித்திர புருஷராக மாற்றி வைத்தது.

உடற்கல்வி ஆசிரியர்களுக்கும், உண்மையைக் கூறுகின்ற நெருக்கடியான நேரங்கள் நிறையவே ஏற்படுவதுண்டு.அப்போது, மாணவர்களுக்கு நலம் பயப்பதற்காக, நல்லது செய்வதற்காகத் துணிந்து, உண்மையைக் கூறிவிட வேண்டும். சரியான செயல்களை சரியாக மாணவர்கள் செய்கின்ற நிலைமை, அப்பொழுதுதான் ஏற்படும்.

ஆகவே, உண்மையைக் கூறுகின்ற தைரியம், சந்தர்ப்பங்களுக்கு சாய்ந்து போகாமல் சாமர்த்தியமாக வெல்லுகிற தைரியம் உள்ள தலைவர்களே, தொண்டர்களால் துாய அன்போடு பாராட்டப்படுவார்கள்.

6. ஒழுக்கப் பண்புகள்

ஒழுக்கமாக வாழ்வது, கற்பைப் பேணுவது என்பதெல்லாம் தொண்டர்களுக்கு மட்டுந்தான். தலைவர்