பக்கம்:உடற்கல்வி என்றால் என்ன.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

143



5. தாய்மைக் காலம்: தாய்மைப் பேறு ஏற்பட்டவுடனேயே, கடுமையான பயிற்சிகளைக் குறைத்துக் கொள்ள வேண்டும். பிறகு தவிர்த்து விட வேண்டும் என்பது சரியான அறிவுரைதான்.


சோதனைகளும் சாதனைகளும்

பெண்களுக்குக் கடுமையான பயிற்சிகள் செய்திட, காலம் முழுவதும் ஏதாவது கஷ்டங்களும் காரணங்களும் இருந்து கொண்டே இருக்கின்றன என்பது உண்மைதான்.

இவ்வளவு சோதனைகள் இருந்தாலும், அவர்கள் செய்திருக்கிற சாதனைகள் பெரிது. பெரிதோ பெரிது.

ஒடுகளப் போட்டி நிகழ்ச்சிகளில் 3 நிகழ்ச்சிகளில் அவர்கள் கலந்து கொள்ளக்கூடாது என்று தடை செய்யப்பட்டிருக்கின்றனர்.

கோலூன்றித் தாண்டும் நிகழ்ச்சி, மும்முறைத் தாண்டும் நிகழ்ச்சி. சங்கிலிக் குண்டு வீசி எறிதல்.

தோள் வலிமை குறைவு; இடுப்புப் பகுதியில் தாண்டும்போது ஏற்படுகிற அதிர்ச்சி அதிகம்; இரும்புக் குண்டை வீசி எறியும் வேகத்தின்போது உண்டாகும் நிலை; இவற்றை எண்ணித்தான் அவர்களுக்குப் போட்டியிட அதிகாரம் வழங்கப்படவில்லை.

இருந்தாலும், எறியும் போட்டிகளில், தாண்டும் போட்டிகளில் ஒட்டப் போட்டிகளில் அவர்கள் செய்திருக்கும் சாதனைகள், ஆண்களை நெருங்கிக் கொண்டு மட்டும் இல்லை, வென்று விடுவோம் என்று நெருக்கிக் கொண்டும் இருக்கிறது.