பக்கம்:உடற்கல்வி என்றால் என்ன.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

163


 பிரதி செயல் வினைகளில் மேலாண்மை பெற்றுக் கொள்கிறது.

14. செல்களுக்கு உணவும் காற்றும்தான் முக்கியமாகும். அவற்றை செல்கள் உடற்பயிற்சியின் போது; தங்கு தடையில்லாமல் பெற்றுக் கொள்கின்றன. அதனால், தேகமும் தன்னிகரில்லா தயார் நிலையில் பணியாற்றும் தகுதியை மிகுதியாகப் பெற்று மிளிர்கிறது. ஒளிர்கிறது.

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பார்கள். செல்வத்துள் செல்வம் நலச் செல்வம் என்பார்கள். அந்த நலத்திற்காகத்தான் உடல் ஏங்கிக் கொண்டிருகயீகறது. அந்த ஏக்கத்தைத் தீர்க்காத தேகத்திற்குரியவர்கள் தாம் நலம் குறைந்து நலிந்து மெலிந்து, நாலாவிதமான துன்பங்களுக்கும் துயரங்களுக்கும் ஆளாகிறார்கள்.

அப்படி வாழாமல், ஆனந்தமாக வாழ வழிகள் என்ன? அவற்றை அமைத்துத் தருபவை எவை? அத்தகைய வினாக்குரிய விடையைக் காண்போம்.

1. பாரம்பரியம்

2. சுற்றுப்புறச் சூழ்நிலை

3. உடற்பயிற்சி

4. ஓய்வும் உள அமைதியும்

இந்த நான்கு பிரிவுகளைப் பற்றியும், நாம் ஏற்கெனவே நிறைய தெரிந்து வைத்திருக்றோம், மீண்டும் விளக்கமாக எழுத வேண்டியது அவசியமில்லை.

தனிப்பட்டோரின் தேக நலம், அவருக்கே ஆனந்தமான வாழ்வை அளிக்கிறது. அவரது இல்லத்தின் மேன்மையை மிகுதிப்படுத்துகிறது. அவர் வாழும் நாட்டிற்கும் அளவிலா பெருமையை அளிக்கிறது.