பக்கம்:உடற்கல்வி என்றால் என்ன.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

213


மிதமான சக்தியை உடலில் தேக்கி, பதமாக வாழ்விக்கிற பணியை ஆற்றுகிறது.

குழந்தைகள் மனதிலே அமுத்தப்படுகிற ஆசைகளும், வெளியாக்கப்படாத உணர்வுகளும் நிறைந்து கிடைப்பது இயற்கைதான், வீட்டிலே போடப்பட்டிருக்கும் கடுமையான கட்டுப்பாடுகளும், பள்ளிகளில் சூழ்ந்திருக்கிற சட்டங்களும் திட்டங்களும், அவர்களது ஆசைகளை உந்துதல்களை அழுத்திக் கொண்டிருப்பதும் உண்மைதான்.

நிறைவேற்றப்படாத ஆசைகள், நெஞ்சிலே நெருப்பாக எரிந்துகொண்டும்,நிலைமைகள் கிடைக்காதா என்று நெருடிக் கொண்டும் கிடக்கும். வழிகிடைக்காதபோது, அந்த நெஞ்சங்கள் வக்ரம் நிறைந்தனவாக மாறிவிடுகின்றன.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், குழந்தைகளிடம் தேங்கிக் கிடக்கிற மிகுதியான சக்தியினை (Energy) செலவழித்து, சமாதானப்படுத்துகிற பணியைத்தான் விளையாட்டுக்கள் செய்து, குழந்தைகளைக் குதுகலப் படுத்துகின்றன. அதனால்தான், குமுறல்களைக் கொடுக்கின்ற உணர்வுகளைக் கட்டுப்படுத்தி, வளப்படுத்தி வாழவைக்கும் சிறந்த சேவையை விளையாட்டுக்கள் செய்து காட்டுகின்றன.

3. சமூக உணர்வுகளில் சுமுகம்

விளையாட்டுக்கள் என்றதும், கூடி விளையாடுகின்ற குழு விளையாட்டுகளே அதிகம் இருக்கின்றன. அதிலே ஈடுபடுகிற குழந்தைகள், தங்கள் உணர்வுகளிலும் உந்துதல்களிலும் கூட, மற்றவர்களுடன் ஒத்துப்போகின்ற உறவுநிலையில் உடன்படுகின்றனர்.