பக்கம்:ஆலயங்கள் சமுதாய மையங்கள்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆலயங்கள் சமுதாய மையங்கள் இ 11

தவறன்று. அறியாமை. என்பதற்கு இரண்டு தத்துவங் களிலுமே பெரும்பாலும் ஒரே பொருள் கொள்ளப் பெறுகிறது. அறியாமை என்பது ஒன்றும் தெரியாமையன்று. ஒன்றைப் பிறிதொன்றாக முறை பிறழ அறிதலே அறியாமை என்று கருதப்படுகிறது. உயிர் நல்லறிவு வழிப்பட வேண்டும் என்பதில் இரண்டு தத்துவ இயல்களும் ஒத்த நிலையினவே யாம், மார்க்சியத்தின் தோற்றத்திற்குக் காரணம் ஐரோப்பிய நாடுகள், மற்ற நாடுகளின் வரலாற்றுப் போக்குகளேயாம். மார்க்சிய தத்துவ ஞானத்தின் தோற்றத்திற்குக் களம், மனித குல வரலாறேயாம். இந்த மனித குல வரலாற்றில் பண்ணை அடிமை முறை. முதலாளித்துவம் ஆகியன மனித குலத்தைக் கொச்சைப்படுத்தி, இழிவுபடுத்தி, நடைப் பிணங்களாக்கிய கொடிய நிலையை மாற்றும் நோக்கத்தில் மார்க்சிய தத்துவ ஞானம் தோன்றியது.

சைவ சித்தாந்தம், "உயிர்கள் படைக்கப்பட்டன. வல்ல; என்றும் உள்ளன; தோற்றமும் அழிவுமில்லாதன உயிர்கள் பல; அவை கல்வி கேள்வியால் அறிவு பெறுவன: அறிவித்தால் அறியும் தகுதியுடையன. உயிர்கள் மகிழ்ந்து வாழும் இயல்பின" என்றெல்லாம் கூறுகின்றது. மார்க்சியமும் உயிர்க்குரிய இந்த இயல்புகளை உடன்பட்டே நிற்கிறது. ஆனால், சைவசித்தாந்தம் உயிர்களின் அறிவை சிற்றறிவு என்று எல்லை கட்டுகிறது. மார்க்சியம் மனித அறிவின் மாட்சிக்கு எல்லை கட்டவில்லை;

"மனித சிந்தனை முடிவில்லாமல் சதாகாலமும் தோற்றத்திலிருந்து சாராம்கத்திற்கு முதல்நிலையான சாராம்சத்தி லிருந்து அடுத்த உயர்ந்த நிலையிலான சாராம்சத்திற்கு மேலும்