பக்கம்:அந்த நாய்க்குட்டி எங்கே.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

86

மாஸ்டர் உமைபாலன்



உமைபாலனின் உடல் முழுவதும் நடுங்கியது; ரத்தம் கொதித்தது. துடிதுடிப்பு வளர்ந்தது. “ஏ கிழவா, நான் யாருன்னா கேக்கிற?...இது என் தங்கச்சிடா!.. இது இங்கே எப்படி வந்துச்சு அப்படின்னுதான் புரியலே...! எங்க சின்னம்மா இதை விட்டுப்புட்டு ஒரு செகண்ட் கூட இருக்கமாட்டாங்களே!...” என்று விம்மினான்.

கிழவன் தலையை உயர்த்தி, “தம்பி, நீ யாரு...? அதை முதலிலே சொல்லு. ஓட்டலிலே மேஜை துடைக்கிற உனக்கு இவ்வளவு பணக்காரத் தங்கச்சி எப்படி இருக்க முடியும்?..” என்று அமத்தலாகக் கேட்டான்.