இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
பூவை எஸ். ஆறுமுகம்
73
உமைபாலன், ஜெயராஜை நோக்கினான்.
ஜெயராஜோ “எவண்டா எச்சில் இலையை எடுப்பான்!... "சே!” என்றான் கம்பீரத்தொனியுடன். “சே! கேவலம்!”
ஆனால் உமைபாலன் அங்கிருந்து நகர்ந்தான். மேல் வரிசையிலிருந்த முதல் எச்சில் இலையை எடுத்துக் கொண்டிருந்தான். ‘திருடறது கேவலம்: பொய் பேசறது கேவலம்! இது கடமை!’