பக்கம்:அந்த நாய்க்குட்டி எங்கே.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பூவை எஸ். ஆறுமுகம்

81



நேற்று வந்து தேடிய ஏழைக்கிழவன் சாம்பான் இன்றும் வந்தான். மகனைப் பற்றித் தடயம் ஏதாவது கிடைத்ததா என்று ஆவல் பொங்கக் கேட்டான்.

ஐயர் கையை விரித்தார்.

சாம்பான் போய்விட்டான்.

இருந்திருந்தாற்போல என்னவோ நினைத்தவராக, ‘விசுக்’ கென்று எழுந்த கனபாடி கங்காதரம் ஐயர், பொடிமட்டையுடன் உள்ளே சென்றார். கொல்லைப்புறம் இருந்த பெட்டிகளில் ஜெயராஜின் பெட்டியைக் கேட்டு, அதன் பூட்டை உடைத்தார்.

நல்ல, அழகிய, உயர்ந்த சட்டைகள், ட்ரவுசர்கள் இருந்தன. அடியில் ரூபாய் நோட்டுகள் சில இருந்தன. மொத்தம் இருபது ரூபாய்!– சில்லறைகள் வேறு! எல்லாவற்றையும் பார்த்ததும், ‘நிஜமாகவே இவன் பெரிய இடத்துப் பிள்ளைதானோ?’ என்ற குழப்பம் அவரை உலுக்கியது. இன்னும் நன்றாகப் பெட்டியை அலசினார்.