பக்கம்:பாரதியும் பாட்டும்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

+ ごけフ - த்த க. பாடும்போது இ சை யின்பங்களைக் காட்டுதல் முதல் காரியமாகவும், தாளத்தை உபகரணமாகவும் கொள்ளவேண்டும். சுமார் 12 வருஷங்களுக்கு முன்பு நான் இரண்டு மூன்று வருஷம் பூரீகாசியில் வாலஞ் செய்தேன். அங்கே, பாட்டுக் கச்சேரி செய்ய வரும் ஆண்களுக்கெல்லாம் நேர் க்தியான வெண்கலக் குரல் இருந்தது. பெண்களுக்கெல்லாம் தங்கக் குரல். அங்கிருந்து 'தன்குட்டிற்கு வந்தேன். இங்கே ஒரிரண்டு பேரைத் தவிர மற்றப்படி பொதுவாக வித்வான் களுக்கெல்லாம் தொண்டை சீர்கெட்டிருப்பதைப் பார்க்கும் போது, எனக்கு மிகவும் வியப்புண்டாயிற்று. ஒன்றுபோல எல்லோருக்கும் இப்படித் தொண்டை வலிமை குறைந்தும் நயங் குறைந்தும் இருப்பதன் காரணமென்ன? இதைப் பற்றிச் சில வித்வான்களிடம் கேட்டேன். வடநாட்டில் சர்க்கரை, பால், ரொட்டி, நெய் சாப்பிடுகிருர்கள்: புளியும் மிளகாயும் சேர்ப்பதில்லை; இங்கே புளி, மிளகாய் வைத்துத் தீட்டுகிருேம். அதனுலே தான் தொண்டை டு கட்டுப் போகிறது என்றனர். பின்னிட்டு நான் யோசனை செய்து பார்த்ததில், மேற்படி காரணம் ஒரு சிறிது வாஸ்தவம் தான்' என்று தெரிந்து கொண் டேன். ஆனல் அதுவே முழுக்காரணம் அன்று. நம்மவர் தொண்டையை நேரே பழக்குவதில்லை. காட்டு வெளி களிலே போய், கர்ஜனை செய்யவேண்டும். நதி திரங்கள், ஏரிக்கரை, கடற்கரைகளிலே போய்த் தொண்டையைப் பழக்கவேண்டும். சாஸ்திரப்படி அஹார எாதனம் செப் யும் வழக்கம் தென்னாட்டிலே குறைவுபட்டிருக்கிறது. தவிரவும், உள்ளத்திலே வீரம் இருக்கவேண்டும். உள் ளத்திலே ஸத்து இல்லாதவர்களுக்கு ஒருதொழிலும் நேரே வராது. கலைகள் நேர்ப்படுவதைப் பற்றிப் பேச வேண்டிய