பக்கம்:பாரதியும் பாட்டும்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

35 குரலும் ஏற்பட்டிருக்கின்றன. பெண்களிலே சிலர் இயற்கை என்னத்தை அதிக ஸ்ன்னப்படுத்த வேண்டுமென்று கருதிக் கள்ளத் தொண்டையிற் பாடுகிருர்கள். வேறு சிலர் லஜ்ஜையினலே கள்ளத் தொண்டைக்கு வந்து சேருகிருர் கள். இதுவும் தவறேயாம். தொண்டையைத் திறந்து தெளிவாகப் பாடுவதிலே லஜ்ஜைப்டட யாதொரு நியாயமு மில்லை. 字 பெண்ணின் பாட்டு இதிலுள்ள வகுப்புக்கள் இருபாலருக்கும் பொதுவான சந்தங்கள் இருப்பதுடன், பெண்களுக்கு.மாத்திரம் சிறப்பான பாட்டுக்களும் சந்தங் களும் இருக்கின்றன. பண்டைத் தமிழ் நாட்டு மாதர் பாடிக்கொண்டிருந்த பல பாட்டு வகைகள் இப்போது வழக்கின்றி இறந்து போய்விட்டன. ஆனல், ஜீவன் பெண்ணென்றும், பரமாத்மா ஆணென்றும் பாவனை செய்து பழைய பக்தர் பாடியிருக்கும் பாட்டுக்களில் பெண்களுக்குரிய சில பாட்டு வகைகள் காணப்படுகின்றன. திருஷ்டாந்தமாக, திருவாசகத்திலே பின்வரும் வகை கள் காணலாம். (1) எம்பாவை பெண்கள் நீராடப்போவது). (2) அம்மானைப் பாட்டு. (3) தும்பி, குயில், கிளி முதலிய தூதுப் பாட்டுகள்.