பக்கம்:பாரதியும் பாட்டும்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. 69 கணபதி ராயன்-அவனிரு காலைப் பிடித் திடுவோம்: குண முயர்ந்திடவே-விடுதலை கூடி மகிழ்ந்திடவே. (ஒம் சக்தி ஓம் சக்தி ஒம்) சொல்லுக் கடங்காவே-பரா சக்தி சூரத் தனங்களெல்லாம்; வல்லமை தந்திடுவாள்-பரா சக்தி வாழி யென்றே துதிப்போம். (ஒம் சக்தி-) வெற்றி வடிவேலன்-அவனுடை வீரத்தினைப் புகழ்வோம்; சுற்றி நில்லாதே போ!-பகையே துள்ளி வருகுது வேல். (ஒம் சக்தி...) தாமரைப் பூவினிலே-சுருதியைத் தனியிருந் துரைப்பாள் பூமணித் தாளினேயே-கண்ணி லொற்றிப் புண்ணிய மெய்திடுவோம். (ஒம் சக்தி) பாம்புத் தலைமேலே-நடஞ் செயும் பாதத்தினைப் புகழ் வோம்; மாம்பழ வாயினிலே குழவிசை வண்மை புகழ்ந்திடு வோம்; (ஒம் சக்தி...) செல்வத் திருமகளேத்-திடங்கொண்டு சிந்தனை செய்திடுவோம்; செல்வ மெல்லாந் தருவாள்-நம தொளி திக்க னைத்தும் பரவும். (ஒம் சக்தி...)