பக்கம்:பாரதியும் பாட்டும்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. இறைவா இறைவா! பல்லவி எத்தனை கோடி இன்பம் வைத்தாய்!-எங்கள் இறைவா! இறைவா! இறைவா! (ஒ-எத்தனை) சரணங்கள் 1. சித்தினை அசித்துடன் இணைத்தாய்-அங்கு சேரும்ஐம் பூதத்து வியனுல கமைத்தாய் அத்தனை யுலகமும் வர்ணக் களஞ்சிய மாகப் பலபலநல்லழகுகள் சமைத்தாய். (ஒ-எத்தனை) 2. முக்தியென் ருெருநிலை சமைத்தாய்-அங்கு முழுதினையு முனரும் உணர் வமைத்தாய் பக்தியென் ருெருதிலே வகுத்தாய்-எங்கள் பரமா! பரமா! பரமா! (ஒ.எத்தனை) 7. வெள்ளைத் தாமரை வெள்ளைத் தாமரைப் பூவில் இருப்பாள், வீணை செய்யும் ஒளியில் இருப்பாள்; கொள்ளே யின்பம் குலவு கவிதை கூறு பாவலர் உள்ளத் திருப்பாள்! உள்ள தாம்பொருள் தேடி புணர்ந்தே ஒதும் வேதத்தின் உள்நின் ருெளிர்வாள்; கள்ள மற்ற முனிவர்கள் கூறும் கருணை வாசகத் துட்பொரு ளாவாள்.(வெள்ளைத்)