பக்கம்:பாரதியும் பாட்டும்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. Յ. 11. கண்ணன்-என் காதலன் (காட்டிலே தேடுதல்) திக்குத் தெரியாத காட்டில்-உனத் தேடித் தேடிஇளைத்தேனே. மிக்க நலமுடைய மரங்கள்.-பல விந்தைச் சுவையுடைய கனிகள்.-எந்தப் பக்கத்தையும் மறைக்கும் வரைக்ள்.-அங்கு பாடி நகர்ந்து வரு நதிகள்.-ஒரு (திக்குத்) நெஞ்சிற் கனல்மனக்கும் பூக்கள்-எங்கும் நீளக் கிடக்குமிலைக் கடல்கள்-மதி வஞ்சித் திடுமகழிச் சுனைகள்.-முட்கள் மண்டித் துயர்கொடுக்கும் புதர்கள்-ஒரு (திக்குத்) ஆசை பெறவிழிக்கும் மான்கள்.-உள்ளம் அஞ்சக் குரல்பழகும் புலிகள்-நல்ல நேசக் கவிதைசொலும் பறவை.-அங்கு நீண்டே படுத்திருக்கும் பாம்பு-ஒரு (திக்குத்) தன்னிச்சை கொண்டலையும் சிங்கம்-அதன் சத்தத் திணிற்கலங்கும் யானை-அதன் முன்னின் ருேடுமிள மான்கள்-இவை முட்ட தயல்பதுங்குந் தவளே-ஒரு (திக்குத்) கால்கை சோர்ந்துவிழ லானேன்-இரு கண்ணும்துயில்படர வானேன்-ஒரு வேல்கைக் கொண்டுகொலை வேடன்-உள்ளம் வெட்கம் கொண்டொழிய விழித்தான்-ஒரு(திக்குத்) "பெண்ணே உனதழகைக் கண்டு-மனம் பித்தங்கொள்ளு தென்று நகைத்தான்-அடி கண்ணே, எனதிருகண் மணியே-உனக் கட்டித் தழுவமனம் கொண்டேன். 6 ماسہ ، Lirr