பக்கம்:பாரதியும் சமூகமும்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10.

II.

12.

13.

14.

15.

l6.

17

அச்சமும் பேடிமையும் அடிமைச் சிறுமதியும் உச்சத்திற் கொண்டாரடி-கிளியே ஊமைச் சனங்களடீ.

ஊக்கமும் உளவலியும் உண்மையிற் பற்றுமில்லா மாக்களுக் கோர் கணமும்-கிளியே வாழத் தகுதியுண்டோ? மானம் சிறிதென் றெண்ணி வாழ்வு பெரிதென் றெண்ணும் ஈனர்க் குலகந்தனில்-கிளியே இருக்க நிலைமை யுண்டோ? சிந்தையிற் கள்விரும்பிச் சிவ சிவ வென்பதுபோல் வந்தே மாதர மென்பர்-கிளியே மனதி லதனக் கொள்ளார்.

பழமை பழமை யென்று பாவனை பேசலன்றிப் பழமை யிருந்தநிலை-கிளியே பாமர ரேதறிவார்?

நாட்டி, லவமதிப்பும் நாணின்றி யிழிசெல்வத் தேட்டில் விருப்புங்கொண்டே-கிளி.ே சிறுமை யடை வாரடீ.

சொந்தச் சகோதரர்கள் துன்பத்திற் சாதல் கண்டும் சிந்தை யிரங்காரடீ-கிளியே செம்மை மறந்தாரடீ.