பக்கம்:பாரதியும் சமூகமும்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3.

4.

jl8

சொந்த அரசும் புவிச் ககங்களும் மாண்புகளும் அந்தகர்க் குண்டாகுமோ ?-கிளியே அலிகளுக்கின்ப முண்டோ ?

கண்க ளிரண் டிருந்தும் கானுந் திறமை யற்ற

பெண்களின் கூட்டமடீ-கிளியே பேகிப் பய னென்னடி?

யந்திர சாலை யென்பர் எங்கள் துணிக ளென்பர் மந்திரத்தாலே யெங்கும்-கிளியே மாங்கனி வீழ்வதுண்டோ?

உப்பென்றும் சீனி யென்றும் உள்நாட்டுச் சேலை யென்றும் செப்பித் திரிவாரடி-கிளியே செய்வ தறியாரடீ.

தேவியர் மான மென்றும் தெய்வத்தின் பக்தி யென்றும் நாவிற்ை சொல்வதல்லால்-கிளியே நம்புத லற்றாரடீ. மாதரைக் கற்பழித்து வன்கண்மை பிறர் செய்யப் பேதைகள் போலுயிரைக்-கிளியே பேணி யிருந்தாரடி.

தேவி கோயிலிற் சென்று தீமை பிறர்கள் செய்ய ஆவி பெரிதென் றெண்ணிக்-கிளியே அஞ்சிக் கிடந்தாரடி.