பக்கம்:பாரதியும் சமூகமும்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4.

26

ஏட்டையும் பெண்கள் தொடுவது தீமையென் றெண்ணி யிருந்தவர் மாய்ந்து விட்டார் வீட்க்குள்ளே பெண்ணைப் பூட்டி வைப்போ மென்ற விந்தை மனிதர் தலை கவிழ்ந்தார். (கும்மி மாட்டை யடித்து வசக்கித் தொழுவினில் மாட்டும் வழக்கத்தைக் கொண்டு வந்தே வீட்டினி லெம்மிடங் காட்ட வந்தாரதை வெட்டி விட்டோ மென்று கும்மியடி. (கும்மி

நல்ல விலைகொண்டு நாயை விற்பாரந்த நாயிடம் யோசனை கேட்ப துண்டோ? கொல்லத் துணிவின்றி நம்மையு மந்நிலை

கூட்டி வைத்தார் பழி கூட்டி விட்டார். (கும்: கற்பு நிலையென்று சொல்லவந் தாரிரு ககரிக்கு மஃது பொதுவில் வைப்போம் வற்புறுத்திப் பெண்ணைக் கட்டிக்கொடுக்கும் வழக்கத்தைத் தள்ளி மிதித்திடுவோம். (கும்மி பட்டங்களாள்வதுஞ் சட்டங்கள் செய்வதும் பாரினிற் பெண்கள் நடத்த வந்தோம் எட்டு மறிவினி லானுக்கிங்கே பெண் இளைப்பில்லை காணென்று கும்.மியடி, (கும்மி வேதம் படைக்கவும் நீதிகள் செய்யவும் வேண்டி வந்தோ மென்று கும்.மியடி சாதம் படைக்கவுஞ் செய்திடுவோந் தெய்வச் சாதி படைக்கவுஞ் செய்திடுவோம். (கும்! காத லொருவனைக் கைப்பிடித்தே யவன் காரியம் யாவினுங் கைகொடுத்து மாதர றங்கள் பழமையைக் காட்டிலும் மாட்சி பெறச்செய்து வாழ்வமடி. (கும்!