பக்கம்:பாரதியும் சமூகமும்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18

17. பஞ்சத்தும் நோய்களிலும்

பாரதர் புழுக்கள் போல் துஞ்சத்தம் கண்ணுற் கண்டும்-கிளியே சோம்பிக் கிடப்பாரடீ.

18. தாயைக் கொல்லும் பஞ்சத்தைத்

தடுக்க முயற்சி யுரு.ர் வாயைத் திறந்து சும்மா-கிளியே வந்தே மாதர மென்பார்.

5. தொண்டு செய்யும் அடிமை

குறிப்பு : ஸ்வராஜ்யம் வேண்டுமென்ற பாரத வாஸிக்கு, ஆங்கிலேய உத்தியோகஸ்தன் கூறுவதாக இப் பாடல் அமைந்துள்ளது. நந்தனர் சரித்திரக் கீர்த்தனையில் வந்துள்ள பாடல்கள் பாரதியாரின் உள்ளத்தைப் பெரிதும் கவர்ந்திருக்கிறது. மேலும், அக்காலத்தில் இப்பாடல்கள் கதாகாலட்சேபம் செய்பவர்களால் அடிக்கடி பாடப் பட்டிருக்க வேண்டும்.

இப்பாடல்களின் வர்ணமெட்டைப் பயன்படுத்தினல் மக்கள் மனதில் நன்கு பதியும் என்ற நோக்கமும் கவிஞருக்கு இருந்திருக்கவேண்டும். அதனுல்தான் “ஒய் திலகரே நம்ம ஜாதிக்கடுக்குமோ’, ‘அன்னியர் தமக் கடிமையல்லவே, “நாமென்ன செய்வோம் துணைவரே” முதலான பாடல்களை நந்தனர் கீர்த்தன்ைப் பாடல்களின் வர்ணமெட்டில் இயற்றியிருக்கிரு.ர்.

எளிய சொல், எளிய சந்தம், எளிய வர்ணமெட்டுஇவற்றைக் கையாண்டு புதிய கவிதைகள் படைக்க வேண்டும் என்று விரும்பிய கவிஞர், தாமே ஆனந்தக்