பக்கம்:பாரதியும் சமூகமும்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

67

நெஞ்சிற் கவலை நிதமும் பயிராக்கி அஞ்சி உயிர்வாழ்தல் அறியாமமை-தஞ்சனெ வையமெலாங் காக்கு மகாசக்தி நல்லருளை ஐயமறப் பற்றல் அறிவு. வையகத்துக் கில்லை மனமே நினக்கு நலம் செய்யக் கருதியிவை செப்புவேன்-பொய்யில்லை எல்லா.மளிக்கும் இறை நமையுங் காக்குமெனும் சொல்லால் அழியும் துயர். எண்ணிற் கடங்காமல் எங்கும் பரந்தனவாம் விண்ணிற் சுடர்கின்ற மீனை யெலாம்-பண்ணியதோர் சக்தியே நம்மைச் சமைத்தது காண் நூருண்டு பக்தியுடன் வாழும் படிக்கு.

17. வாசக ஞானம்

(குறிப்பு : உ ண் ைம ெய ன் று ஏதாவது ஒன்றை நமது அறிவைக் கொண்டு நன்கு ஆராய்ந்து தெளிதல் வேண்டும். பிறகு அதை நடைமுறையிற் கொண்டுவர வேண்டும். இதற்குத் துணிச்சல் வேண்டும். இந்தத் துணிச் சல் இல்லாதபோது அறிவினல் எவ்விதமான பயனும் இல்லாமற் போய்விடுகிறது.

ஆனல் அறிவைக் கொண்டு தெளிந்த பல வற்றை நடைமுறையில் எவ்வாறு மக்கள் கைக் கொள்ளத் தவறி விடுகிரு.ர்கள் என்பதை இக்கட்டுரையில் எடுத்துக்காட்டுகிரு.ர். பெண் கள் உரிமை, ஜாதி வேறுபாடுகள் என்று பல வற்றில் நாம் அறிவுபூர்வமாக ஏற்றுக் கொண்ட