பக்கம்:பாரதியும் சமூகமும்.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

169

.ே தோரோ என்ற அமெரிக்க ஆசிரியர்:-உடம்பை சோம்பலுக்கும் சொகுசுக்கும் இரையாக்கி வைத் திருப்பவனை ஞானியாகக் கொள்ளலாகாது. ஆத்மாவுக்கு உடம்பே முதலாவது சீடன்.

7. கார்லைல் என்ற ஆங்கிலேய ஆசிரியர்:-சந்தேகம், விசனம், மனச்சோர்வு, கோபம், ஏக்கம் இந்தப் பிசாசுகளெல்லாம் மனிதனை அடிக்கும் பொருட்டு பதுங்கி நிற்கின்றன. அவன் சோம்பலுக்கிடங் கொடுக்கும்போது இவையெல்லாம் அவனை வந்து தாக்குகின்றன. தீவிரமாக உடம்பை உழைப்பதே இந்தப் பிசாசுகள் அடிக்காமல் தன்னைக் காத்துக் கொள்ளுவதற்கு நிச்சயமான வழி. தொழிலைக் கைக்கொண்டால், பிறகு எந்தப் பிசாசும் பக்கத் தில் நெருங்காது. மிஞ்சி வந்தால், தூரத்திலிருந்து உறுமும். அவ்வளவுதான்.

8. மோந்தாஞ் என்ற ப்ரான்ஸ் தேசத்துப் பண்டிதர்:-சோம்பலை நரக வேதனைகளில் ஒன்றாகக் கணக்கிட வேண்டும். அதைச் சிலர் சொர்க்க இன்பங்களில் ஒன்றாக நினைக்கிறார்கள்.

9. நபி ஸ்குலேமான்:-சோம்பேறியே எறும்பி னிடம் போ. அதன் நெறிகளைப் பார். உனக்குப் புத்தி வரும்.

|

விளக்கம்- காளிதாஸன்

மேலே மொழிபெயர்த்திருக்கிற வசனங்களில் ஆலில்லாதவருத்த் ஆத்ம ஞானமில்லை யென்று *ாரோ (6) சொல்லுகிரு.ர். ஆத்மாவுக்கு முதலாவது