பக்கம்:தேன்பாகு.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

21


இட்டிலிகளும் இருந்தன, காக்கை அந்த இட்டிலிகளைப் பார்த்தது. அதன் வாயில் நீர் ஊறியது.

கிழவி எங்கேயோ கவனம் இன்றிப் பார்த்துக் கொண்டிருந்த சமயம் பார்த்து அந்தக் காக்கை ஒர் இட்டிலியைக் கவ்வியது; உடனே வேகமாகப் பறந்து போயிற்று! பாவம் கிழவி உரக்கக் கத்தினாள். ஒரு பயனும் இல்லை.

இட்டிலியைக் கவ்விக்கொண்டு வந்த காக்கை ஊருக்கு வெளியே ஒரு மரத்தின்மேல் போய் உட்கார்ந்தது. அது வாயில் ஒர் இட்டிலியுடன் வரு வதை நரி கவனித்துப் பார்த்தது. எப்படியாவது அந்த இட்டிலியை ருசி பார்க்க வேண்டும் என்ற ஆசை அதற்கும் உண்டாயிற்று.

அந்த மரத்தடிக்கு நரி விரைவாக வந்தது. மேலே உள்ள காக்கையைப் பார்த்து. "தம்பி, இந்த இட்டிலியை நீ எப்படி எடுத்துக் கொண்டு வந்தாய்? உன் சாமார்த்தியமே சாமார்த்தியம்!" என்று புகழ்ந்து பேசியது. காக்கை வாயில் கவ்விய இட்டிலியுடன் மரத்தின் மேலேயே இருந்தது.

நரி, இனிமேல் நேரே கெஞ்சிக் கேட்டுத்தான் இட்டிலியில் கொஞ்சம் வாங்க வேண்டும் என்று தெரிந்து கொண்டது. ஆகவே, "தம்பி, எனக்கு வெகு நாட்களாகவே இட்டிலி தின்ன வேண்டும் என்று ஆசையாக இருந்தது. நான் ஊருக்குள்ளே போய் ஒன்றும் திருட முடியாதே. நண்டையும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேன்பாகு.pdf/23&oldid=1269874" இலிருந்து மீள்விக்கப்பட்டது