23
மாதிரி ஒன்றோடு இட்டிலியைச் சாப்பிடலாம் என்று தோன்றுகிறது, உனக்குச் சம்மதமாக இருந்தால் அப்படிச் செய்யலாம்" என்றது.
காக்கை, "இப்போது மிளகாய்ப் பொடிக்கு எங்கே போவது?" என்று கேட்டது.
"இதுதானா பிரமாதம்? இட்டிலி எப்படிக் கிடைத்ததோ, அது மாதிரி மிளகாய்ப் பொடி கிடைக்கும். நீ மனசு வைத்தால் எதுதான் கிடைக்காது? நீ இப்போதே ஊருக்குள் போய் மிளகாய்ப் பொடியையும் சம்பாதித்துக் கொண்டு வந்துவிடு. அதுவரை நான் இதைப் பாதுகாத்துக் கொண்டிருக்கிறேன்" என்று தந்திரமாகச் சொல்லியது.
காக்கை அந்த வார்த்தைகளை உண்மையாக நம்பி, மறுபடியும் ஊரை நோக்கிப் புறப்பட்டது. நரி சிறிது கேரம் சும்மா இருந்தது. அதனுடைய துஷ்டகுணம் அதைச் சும்மா இருக்க விட வில்லை. அந்த இட்டிலிக்குப் பக்கத்தில் உட்கார்ந்த நரி அதைத் தொட்டுக் கொண்டே இருந்தது. பின்னும் கொஞ்ச நேரம் ஆயிற்று நரியினால் ஆசையை அடக்க முடியவில்லை. இட்டிலியைக் கையில் எடுத்து வைத்துக் கொண்டது. இதை இப்படியே வாயில் போட்டுக கொண்டு ஓடி விடலாமே! என்று எண்ணம் உண்டாயிற்று. ஆனாலும் அதற்குத் தைரியம் ஏற்படவில்லை.
'இதைக் கொஞ்சம் காக்கில் வைத்துப் பார்க்கலாம்' என்ற எண்ணம் அடுத்தபடியாகத்