பக்கம்:தேன்பாகு.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

47


போகும் வழியில் ஒருவன் ஓரிடத்தைத் தாண்டும்போது, "அத்திரிமாக்கு" என்று சொன்னபடி தாண்டினான். அதைக் கேட்ட அனந்தனுக்குக் கொழுக்கட்டை என்றது மறந்து போய் 'அத்திரிமாக்கு' என்றதைப் பிடித்துக் கொண்டான் "அத்திரிமாக்கு, அத்திரிமாக்கு" என்று ஜபித்துக் கொண்டே வீட்டிற்குப் போனான்.

போனவன், தன் மனைவியைப் பார்த்து, "இன்றைக்கு அத்திரிமாக்குப் பண்ணிக்கொடு" என்று கேட்டான். “அவர்கள் வீட்டில் பண்ணிப் போட்டார்கள். எவ்வளவு நன்றாக இருந்தது தெரியுமா? நீயும் அத்திரிமாக்குப் பண்ணு" என்றான்.

“உங்களுக்குப் பைத்தியந்தான் பிடித்திருக்கிறது. அத்திரிமாக்காவது! கத்திரி மாக்காவது: அப்படி ஒன்றும் கிடையாது" என்றாள் அவள்.

அனந்தனுக்குக் கோபம் வந்துவிட்டது. "நான் சொல்கிறேன், நீ பண்ண முடியாது என்கிறாயே!" என்றுசொல்லி அவளை நையப்புடைத் தான். அவள் கைகளிலும், தோள்களிலும் வீக்கம் உண்டாகிவிட்டது.

அப்போது பக்கத்து வீட்டு அம்மாள் அங்கே வந்தாள். "என்னடி இது? உன் உடம்பில் கொழுக்கட்டை மாதிரி வீங்கியிருக்கிறது?" என்று கேட்டாள். அப்போது அனந்தன் காதில் அது விழுந்தது. கொழுக்கட்டை என்றதைக் கேட்ட

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேன்பாகு.pdf/49&oldid=1340027" இலிருந்து மீள்விக்கப்பட்டது