64
பாரதிதாசன்
கண்பிசைந்தே உள்ளம் கலங்குவதேன் கண்வளராய்
அத்தான்வந் தேசினரோ ஆகடியம் பேசினரோ
எத்தால் மனவருத்தம் எந்திழையே கண்வளராய்
ஓடாத மானே உவட்டாத செந்தேனே
நீடாழி சூழ் புவியோர் நித்தியமே கண்வளராய்
பொற்றா மரைமேவும் பொன் அனமே மின்இனமே
நற்றாமம் சூடும் நவமணியே கண்வளராய்
செம்பவள வாயார் தினமும் புகழ்ந்துரைக்கும்
விம்பவள மேவும் விதுகமுகத்தாய் கண்வளராய்
நூதன பிள்ளைத் தாலாட்டு
(20 ஆம் நூற்றாண்டு தொடக்கம், 39 கண்ணிகள். சிறுமணவூர் முனிசாமி முதலியார். இவர் இந்நூற்றாண்டின் தொடக்கத்தில் பாமர் மக்களுக்குவப்பான சிறு பாடல்கள் பல புனைந்தவர்)
கொட்டி வைத்த முத்தே குவித்தநவ ரத்தினமே
கட்டிப் பசும்பொன்னே கண்மணியே கண்வளராய்
நித்திரைசெய் நித்திரைசெய் நெடிய புவி மன்னவனே
சித்திரப்பூந் தொட்டிலிலே சிகாமணியே நித்திரைசெய்
அத்தை அடித்தாளோ அமுதூட்டும் கையாலே
சற்றே மனம் பொறுத்துச் சந்திரனே கணவளராய்
கோட்டை அதிகாரி கொடிக்காரர் உங்களம்மான்
கேட்டதெல்லாந் தருவார் கிஞ்சுகமே கண்வளராய்
பொன்னால் எழுத்தாணி பொற்பமைந்த ரட்டோலை
சின்ன அண்ணாகொண்டுவந்தார் சிறுபொழுது கண்வளராய்.