பக்கம்:அன்பு மாலை.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அன்பு மாலை

29


வன்னமார் பாகை கொள்வான்;
மலிதரச் சிரிப்பான் என்றும்;
துன்னிடும் ஞானி ராம
சுரத்குமார் பாதம் போற்றி!

54


பாகை - தலைப்பாகை மலிதர - மிகுதியாக.

நெடிதுற நினைந்து ஞான
நிலையினை அடைந்து சாந்தக்
கடிநகர் அதனிற் சென்று
காப்புறும் இன்பம் கொள்வார்
அடிதனைப் பணிய நின்றான்;
அருள்மிகும் அருணை தன்னில்
துடியிலா நெஞ்சன் ராம
சுரத்குமார் அடிகள் போற்றி!

55

கடிநகர் - காவலையுடைய நகரம், துடிஇலா- துடித்தல் இல்லாத .


போற்றிய தெய்வ மெல்லாம்
பொலிகின்ற உருவன், என்றும்
சோற்றுக்கே கவலை கொள்ளும்
துன்பினைப் போக்கும் சீலன்,
ஆற்றுறும் அன்பர் தங்கட்
கருள்கின்ற பெரிய நேயன்,
தோற்றிடும் ஞானி, ராம
சுரத்குமார் மலர்த்தாள் போற்றி!

56

ஆற்றுறும்- தன் வழியில் வந்து நிற்கும்.

வைவினைப் புகழாக் கொள்வான்;
வாழ்வினை மாயம் என்பான்;
செய்வினை செப்ப மாகச்
சிந்திப்பார் தமக்கு நேயன்;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்பு_மாலை.pdf/35&oldid=1303420" இலிருந்து மீள்விக்கப்பட்டது