இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
வேலையற்ற பூனை
வீட்டைச் சுற்றிச் சுற்றி வந்து
என்னை உறுத்துப் பார்த்து
எரிச்சல் தருகிறது எப்போதும்,
என்னிடம் ஏதோ தவறு
கண்டிட முயன்று வளையமிடும்
உன்னைப் போல!
என் முன்னே நீ இல்லையெனினும்,
என் அன்பே!
உன்னை நான் எப்படி மறப்பேன்?
1972
வல்லிக்கண்ணன்